சொதப்பும் சென்னை அணி! கழுவி ஊற்றும் ரசிகர்கள்

 

சொதப்பும் சென்னை அணி! கழுவி ஊற்றும் ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் ரசிகர்களின் சாபங்களுக்கும்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 41-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. சார்ஜாவில் நடைபெற்றுவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர் தோல்வியை சந்தித்தால் அணிக்கு இள இரத்தத்தை பாய்ச்ச முடிவு செய்த சென்னை அணி வயதானவர்கள் என விமர்சிக்கப்பட்ட வீரர்களை வெளியேற்றி இளம் வீரர்களை களமிறக்கியது. அதன்படி வாட்சன், சாவ்லா, கேதர் ஜாதவ் நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக தமிழக இளம் வீரர் ஜகதீசன், ருதுராஜ் கெய்க்வாட்ம் இம்ரான் தாகீர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

Image

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் தொடக்க ஆட்டார்களாக பாப் டு பிளிஸ்சிஸ், ருதுராஜ் கெய்க்வாடு களமிறங்கினார். ஆட்டத்தின் முதல் ஓவரிலிருந்தே சென்னை அணி வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். முதலில் ருதுராஜ் கெய்க்வாட், ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட்டானார். தொடர்ந்து அடுத்த ஓவரில் ஜெகதீசனும் ராயுடும் மைதானத்திலிருந்து நடையை கட்டினர். மூன்றாவது ஓவரில் டூ பிளிஸ்சிஸ் ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஜடேஜா 7 ரன்களிலும், கேப்டன் தோனி 16 ரன்களிலும் அவுட்டாகியதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் 7 விக்கெட்களை இழந்த சென்னை அணி 12.4 ஓவரில் 62 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறிவருகிறது.