சென்னையில் ஐபிஎல் ஏலம் – தேதி குறித்த பிசிசிஐ!
Jan 27, 2021, 13:50 IST1611735633000
ஐபிஎல் தொடரில் 14ஆவது சீசன் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பாக ஏலத்தில் பங்கேற்கும் விதமாக ஒவ்வொரு அணியும் சில வீரர்களை விடுவித்திருந்தனர். மொத்தம் 57 வீரர்கள் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏலம் சென்னையில் நடைபெறுகிறது.