#IPL2021 :பஞ்சாப் அணியிடம் தோற்றுப்போன மும்பை

 

#IPL2021 :பஞ்சாப் அணியிடம் தோற்றுப்போன மும்பை

ஐபிஎல் தொடரின் 17வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக டி காக் 3 ரன்களிலும் இஷான் கிசன்6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சூர்ய குமார் நிதானமாக ஆடினர். ரோஹித் சர்மா 40 பந்துகளில் அரைசதம் அடித்தார். சூர்ய குமார் 33 ரன்களிலும் , ரோஹித் சர்மா 63 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது.

#IPL2021 :பஞ்சாப் அணியிடம் தோற்றுப்போன மும்பை

132 என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். நிதானமாக ஆடிய மயங்க் அகர்வால் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல் ராகுல் 60 ரன்களுடனும், கிறிஸ் கெய்ல் 43 ரன்களுடனும் இறுதிவரை களத்தில் நின்று பஞ்சாப் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.17.4 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 132 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.