ராணுவ வீரர்களை நினைவுக்கூறும் சிஎஸ்கேவின் புதிய ஜெர்சி

 

ராணுவ வீரர்களை நினைவுக்கூறும் சிஎஸ்கேவின் புதிய ஜெர்சி

வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் 2021 போட்டி தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

சென்னை அணியின் புதிய ஜெர்ஸி ராணுவ வீரர்களை நினைவுக்கூறும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. காரணம் தோள் பட்டையின் இருபுறமும் ராணுவ வீரர்களின் உடையின் நிறம் இடம்பெற்றுள்ளது.

ராணுவ வீரர்களை நினைவுக்கூறும் சிஎஸ்கேவின் புதிய ஜெர்சி

இதுதொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியான வீடியோ பதிவில் தோனி தனக்கு வழங்கப்பட்டுள்ள புதிய ஜெஸ்ஸி திறந்து பார்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரிய விசில் அடிங்க என கூறுகிறார்.
இந்த வீடியோ வெளியானது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் விசில் போடு என்ற ஹேஷ்டேகில் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதனை சென்னை அணியின் கேப்டன் தோனி வெளியிட்டார். இந்த ஜெர்சியில் ஸ்பான்ஸர்களின் லோகோவும், பெயர்களும் இடம்பெற்றுள்ளன. முன்புறத்தில் மிண்ட்ரா, பின் புறத்தில் இண்டியா சிமெண்ட், கை பகுதியில் நிசான் பெயிண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. கர்ஜிக்கும் சிங்கத்தில் மேலே மூன்று ஸ்டார்கள் இருக்கின்றன.