ஐபிஎல் தொடருக்கான அட்டவணை நாளை வெளியீடு

 

ஐபிஎல் தொடருக்கான அட்டவணை நாளை வெளியீடு

எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ஏகப்பட்ட மாற்றங்கள்; குளறுபடிகள்; பிரச்சனைகள். இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் தொடங்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள் கொரோனா நோய்த் தொற்றால் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டன. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு அணிகள் முறையாக பயிற்சிக்கு பின் ஐக்கிய அமீரகம் சென்றுள்ளனர். போட்டியில் ஆடும் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. கொரோனா பரிசோதனைகளுக்காகவே பிசிசிஐ பத்து கோடி ரூபாய் செலவிட திட்டமிட்டுள்ளது.

ஐபிஎல் தொடருக்கான அட்டவணை நாளை வெளியீடு
பிரிஜேஷ் பட்டேல்

வரும் 19 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை நாளை வெளியிடப்படும் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார். இந்த போட்டிகள் நவம்பர் 10 ஆம் தேதி நிறைவடைகிறது.