போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 40% போனஸ் வழங்க ஐ.என்.டி.யூ.சி தீர்மானம்

 

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 40% போனஸ் வழங்க ஐ.என்.டி.யூ.சி தீர்மானம்

அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு 40 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டுமென ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசு போக்குவரத்து கழக, ஈரோடு மண்டல ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்கத்தின் 25-வது செயற்குழு கூட்டம் மூலப்பட்டறையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 40% போனஸ் வழங்க ஐ.என்.டி.யூ.சி தீர்மானம்

நிர்வாக தலைவர் ரவி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், போக்குவரத்து பணியாளர்களுக்கு 40 சதவீத தீபாவளி போனஸ் வழங்கவும், கொரோனாவால் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 40% போனஸ் வழங்க ஐ.என்.டி.யூ.சி தீர்மானம்