ஒரே வீட்டில் வசித்த வாலிபர்… பெண்ணுடன் கள்ளக்காதல்… தடையாக இருந்த கணவனை அடித்துக் கொன்ற மனைவி

 

ஒரே வீட்டில் வசித்த வாலிபர்… பெண்ணுடன் கள்ளக்காதல்… தடையாக இருந்த கணவனை அடித்துக் கொன்ற மனைவி

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொன்று தூக்கில் தொடங்கிவிட்டு தப்பிய மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் புதுச்சேரியில் நடந்துள்ளது.

மயிலாடுதுறையை சேர்ந்த கோபிநாத் (32)- கவுசல்யா (25) தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. மெக்கானிக்கான கோபிநாத், புதுச்சேரியில் உள்ள முதலியார்பேட்டை சுதானாநகர் ராஜாஜி வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர்களுடன் கோபிநாத்தின் உறவினர் கார்த்திக் (26) உடன் இருந்து வந்தார். இந்த கடந்த 16ம் தேதி கோபிநாத்தின் வீட்டின் கதவு திறந்து கிடந்தை பார்த்த வீட்டின் ஓனர் ரிமையாளர் விஜயகுமார் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, கோபிநாத் தூக்கில் தொடங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து முதலியார்பேட்டை காவல்துறையினருக்கு விஜயகுமார் தகவல் கொடுத்தார். விரைந்து சென்ற காவல்துறையினர், கோபிநாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கான கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அப்போது, கோபிநாத்தின் மனைவி கவுசல்யா, குழந்தை, உறவினர் கார்த்திக் ஆகியோர் தலைமறைவானதோடு, கோபிநாத்தை அடித்து கொலை செய்துவிட்டு, தூக்கில் தொங்கவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து, பதுங்கியிருந்த கவுசல்யா, கார்த்திக் ஆகியோர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், “குடிப்பழக்கம் உள்ள கோபிநாத், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கவுசல்யாவுக்கும், கார்த்திக்குக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதற்கு கோபிநாத் இடையூறாக இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று கோபிநாத் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கவுசல்யா, கார்த்திக்குடன் சேர்த்து கோபிநாத்தை அடித்துக் கொன்றுள்ளார். கொலையை மறைக்க உடலை தூக்கில் தொடங்கவிட்டு தப்பியுள்ளனர். அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.