வாணியம்பாடியில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்
Aug 14, 2020, 21:28 IST1597420689000
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில், கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் விதமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
பொதுமக்களின் நலன் கருதி அலுவலகங்களில் அதனை சுற்றியுள்ள பகுதியிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ள நகராட்சி ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து ககடந்த 2 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் மூலம் நியூடவுன் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
இன்று, உதவி கோட்டப் பொறியாளர் (நெடுஞ்சாலை) அலுவலகம் முன்பு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.