அத்துமீறிய சீனா! இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்க பரிந்துரை

 

அத்துமீறிய சீனா! இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்க பரிந்துரை

டிக்டாக் உள்ளிட்ட சீனாவை சேர்ந்த 55 செயலிகளை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உளவுத்துறை பரிந்துரை செய்துள்ளது.

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய மற்றும் சீன ராணுவத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், சீனாவில் 35 வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன. இருநாடுகளுக்குமிடையேயான மோதலால் எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்தைத்தொடர்ந்து, இரு நாட்டுப் படைகளும் தங்களது படைகளை விலக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

அத்துமீறிய சீனா! இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்க பரிந்துரை

இந்நிலையில் டிக்டாக், ZOOM, SHARE IT, CLEANMASTER, XENDER, UC BROWSER, WE CHAT, HELO, CLASH OF KINGS , CLUB FACTORY உள்ளிட்ட 55 செயலிகள் உளவுத்துறை அளித்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த செயலிகள் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்களின் தரவுகள் வெளியே செல்வதாக எச்சரித்துள்ள உளவுத்துறை இந்த செயலிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக கூறியுள்ளது. எனவே இவற்றை தடை செய்ய வேண்டும் அல்லது பயன்படுத்த வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரை மீது ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறும் அதிகாரிகள், செயலிகளை பயன்படுத்துவதில் உள்ள அபாயங்களை ஆராய்ந்து வருவதாக கூறியுள்ளனர். ஏற்கனவே அரசு சார்ந்த பணிகளில் ZOOM செயலியை பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.