“கடனை கொடு ,இல்லேன்னா ….”கடனை கேட்ட பெண்ணுக்கு மயக்க நிலையில் நேர்ந்த கதி

 

“கடனை கொடு ,இல்லேன்னா ….”கடனை கேட்ட பெண்ணுக்கு மயக்க நிலையில் நேர்ந்த கதி


கடனை திருப்பி கேட்ட உறவுக்கார பெண்ணையும் அவரின் குழந்தைகளையும் கொன்ற வாலிபரை போலீஸ் கைது செய்தது

“கடனை கொடு ,இல்லேன்னா ….”கடனை கேட்ட பெண்ணுக்கு மயக்க நிலையில் நேர்ந்த கதி


உத்தரபிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தின் குச்சா சாதுரம் பகுதியில் சந்தோஷ் ரத்தோர் என்பவர் அவரின் உறவுக்கார பெண் ரேகா என்பவரிடம் 2 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தார் .ஆனால் அவர் தான் சொன்ன நேரத்தில் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார் .இதனால் அந்த ரேகா அவரிடம் பலமுறை பணத்தை பொது இடத்தில் வைத்து கேட்டு அவமானப்படுத்தியுள்ளார் .இதனால் அந்த சந்தோஷ் அந்த பெண்ணை பழிவாங்க துடித்தார் ,

அதன் படி அவர் ஜூலை 21 ம் தேதி ரேகாவின் வீட்டிற்குச் சென்றார் .பின்னர் சில மயக்க மருந்து கலந்த தேநீரை அவருக்கும் அவரது மூன்று குழந்தைகளுக்கும் கொடுத்தார் . பின்னர், அவர்கள் நால்வரும் மயங்கியதும் கத்தி மற்றும் கத்தரிக்கோலால் அவர்கள் அனைவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்தார் .அதன் பிறகு அந்த சந்தோஷ் அந்த 4 பேரைக் கொன்ற பின்னர், அந்த வீட்டைக் கொள்ளையடித்தார் .அங்கிருந்து பணம் மற்றும் நகைகள், ஒரு மடிக்கணினி, ஒரு டேப்லெட் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றைக் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார் .பின்னர் போலீசுக்கு தகவல் தெரிந்து அங்கிருந்து சிசிடிவி கேமரா உதவியுடன் அந்த சந்தோஷினை கைது செய்தனர் .