கனமழை எச்சரிக்கை: சென்னையின் ஏரிகளை கண்காணிக்க அறிவுறுத்தல்!

 

கனமழை எச்சரிக்கை: சென்னையின் ஏரிகளை கண்காணிக்க அறிவுறுத்தல்!

சென்னையின் நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம், பூண்டி உள்ளிட்ட ஏரிகளை கண்காணிக்க நீர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

கனமழை எச்சரிக்கை: சென்னையின் ஏரிகளை கண்காணிக்க அறிவுறுத்தல்!

தமிழகத்தில் கடந்த 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அண்மையில் ஒரு நாள் பெய்த கனமழைக்கே வடசென்னை நீரில் தத்தளித்தது.

கனமழை எச்சரிக்கை: சென்னையின் ஏரிகளை கண்காணிக்க அறிவுறுத்தல்!

இந்த நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னையின் நீராதாரமான செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை கண்காணிக்குமாறு மத்திய நீர்வளத்துறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.