பெண்களிடம் பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டல் ! தன்னை டாக்டர் எனக் கூறி பல பெண்களை வலையில் வீழ்த்திய இளைஞர் !

 

பெண்களிடம் பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டல் ! தன்னை டாக்டர் எனக் கூறி பல பெண்களை வலையில் வீழ்த்திய இளைஞர் !

ஷாஹித் கபூர் நடித்த பாலிவுட் திரைப்படமான கபீர் சிங் என்ற படத்தால் ஈர்க்கப்பட்ட ஆனந்த்குமார், பெண்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக ஒரு திட்டம் தீட்டியுள்ளார். டேட்டிங் வலைத்தளங்களில் தன்னை எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக காட்டி ஏமாற்றிய ஆனந்த்குமார் மற்றும் பிரியாம் யாதவுடன் கைது செய்யப்பட்டார். அவரால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் மருத்துவர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
ஒரு டேட்டிங் வலைதளத்தில் ஒரு போலி சுயவிவரத்தை உருவாக்கி, தன்னை டாக்டர் ரோஹித் குஜ்ரால் என்று மருத்துவராக அடையாளம் காட்டினார், பின்னர் நிறைய பெண்களுடன் பேச ஆரம்பித்துள்ளனர். இதில் அறிமுகம் ஆன பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து ரூ.30,000 வாங்கி உள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் தனிப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் வெளியிடுவதாக கூறி பிளாக்மெயில் செய்துள்ளார். இதேபோல் பல பெண்களிடம் ஆனந்தகுமார் பிளாக் மெயில் செய்து பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக துணை போலீஸ் கமிஷனர் அனீஷ் ராய் கூறினார்

பெண்களிடம் பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டல் ! தன்னை டாக்டர் எனக் கூறி பல பெண்களை வலையில் வீழ்த்திய இளைஞர் !அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, கபீர் சிங் திரைப்படத்தைப் பார்த்தபின் தன்னை ஒரு டாக்டராக அடையாளம் காணும் முழு யோசனை வந்தாக குற்றவாளி ஆனந்த குமார் கூறியுள்ளார். இணையதளத்தில் பெண்களை ஈர்க்கும் வகையில் சுயவிவரத்தை உருவாக்கி உள்ளார்.
முதலில் பழகுவது, பின்னர் தனது தாயின் சிகிச்சைக்கு பணம் வேண்டும் என கேட்பார். பின்னர் அவர்களை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைப்பார். பின்னர் பெண்களின் தனிப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும்படி கேட்பார். அதை அனுப்பியவுடன் அவற்றை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிப்பார் என போலீசார் கூறினர்.