‘புள்ளிங்கோவை வச்சி செஞ்ச இன்ஸ்பெக்டர்’.. தரமான சம்பவம்!

 

‘புள்ளிங்கோவை வச்சி செஞ்ச இன்ஸ்பெக்டர்’.. தரமான சம்பவம்!

கிருஷ்ணகிரி அருகே கோழிக்கொண்டை போல முடி வைத்துக் கொண்டு சுற்றித்திரிந்த சிறுவனுக்கு இன்ஸ்பெக்டர் கொடுத்த தண்டனை வரவேற்பை பெற்றுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பூசாரிப்பட்டி பகுதியில் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு புள்ளிங்கோ சிறுவன் ஒருவன் கோழிக்கொண்டை போன்ற ஹேர் ஸ்டைல் வைத்துக் கொண்டு சுற்றித் திரிந்துள்ளார். அதுமட்டுமில்லாமல், காதில் கடுக்கண் போட்டுக் கொண்டு வித்தியாசமாக இருந்துள்ளார்.

‘புள்ளிங்கோவை வச்சி செஞ்ச இன்ஸ்பெக்டர்’.. தரமான சம்பவம்!

இதைக் கண்டு கடுப்பான இன்ஸ்பெக்டர் உடனே சிறுவனை அழைத்து விசாரித்ததில், அவருக்கு வயது 15 தான் என்பதும் அவர் கத்தாழை மேடு பகுதியில் வசித்து வருகிறார் என்பதும் தெரிய வந்துள்ளது. படிக்க வேண்டிய வயதில் இப்படி ஒரு ஹேர் ஸ்டைல் தேவையா? என சிறுவனை கடிந்து கொண்ட இன்ஸ்பெக்டர், அவனை கையோடு சலூன் கடைக்கு அழைத்துச் சென்று முடியை சீராக வெட்டச் சொல்லியிருக்கிறார். சலூன் கடைக்காரரும் சிறுவனின் முடியை ஒழுங்காக வெட்டி அனுப்பி வைத்திருக்கிறார்.

‘புள்ளிங்கோவை வச்சி செஞ்ச இன்ஸ்பெக்டர்’.. தரமான சம்பவம்!

இதையடுத்து சிறுவனுக்கு அட்வைஸ் கொடுத்த இன்ஸ்பெக்டர், படிக்க வேண்டிய வயதில் இது போன்று கடுக்கண் போட்டுக் கொண்டும் கோழிக்கொண்டை போல ஹேர் ஸ்டைல் வைத்துக் கொண்டும் இருக்கக் கூடாது என அறிவுறுத்தி அவரை அனுப்பி வைத்துள்ளார். சிறுவனுக்கு இன்ஸ்பெக்டர் கொடுத்த இந்த நூதன தண்டனை அப்பகுதி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.