நகைக் கடையில் நூதன முறையில் தங்கம் திருட்டு… தப்பியோடிய பெண்களுக்கு போலீஸ் வலை

 

நகைக் கடையில் நூதன முறையில் தங்கம் திருட்டு… தப்பியோடிய பெண்களுக்கு போலீஸ் வலை

சென்னை

ஆவடி அருகே நூதன முறையில் நகைக் கடையில் தங்கத்தை திருடிச்சென்ற 2 பெண்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் பகுதியில் சுனில் என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். இன்று இவரது கடைக்கு வந்த 2 பெண்கள், கம்மல் வேண்டும் என்றும், அதற்கான டிசைன்களை காண்பிக்குமாறும் கேட்டுள்ளனர். கடைக்காரர் காண்பித்த பல்வேறு டிசைன்களை பார்வையிட்ட இருவரும், தங்களுக்கு பிடிக்கவில்லை என கடையில் இருந்து சென்றுள்ளனர்.

நகைக் கடையில் நூதன முறையில் தங்கம் திருட்டு… தப்பியோடிய பெண்களுக்கு போலீஸ் வலை

பின்னர் கடையில் நகைகளை கணக்கு பார்க்கும்போது 6 கிராம் தங்க நகை மாயமானது தெரியவந்தது. கடையில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்தபோது அந்த பெண்கள் நகையை திருடியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் சுனில், இதுகுறித்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் நகையை திருடிச் சென்ற பெண்களை தேடி வருகின்றனர்..