பிரிந்த மனைவி -எரித்த கணவர் -குடிகாரரால் ஆறு பேருக்கு நேர்ந்த கொடுமை.

 

பிரிந்த மனைவி -எரித்த கணவர் -குடிகாரரால் ஆறு பேருக்கு நேர்ந்த கொடுமை.


தன்னுடைய மனைவி பிரிந்து சென்ற கோபத்தில், ஒரு குடிகார கணவர் அவரின் மாமியார் வீட்டிலிருந்த ஆறு பேரை தீ வைத்து எரித்தார்.

பிரிந்த மனைவி -எரித்த கணவர் -குடிகாரரால் ஆறு பேருக்கு நேர்ந்த கொடுமை.


கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள பொன்னம்பேட்டை காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட முகதகேரி கிராமத்தில் யரவரா போஜா (50), என்ற ஒரு தொழிலாளி அடிக்கடி மது அருந்திய பின்னர் தனது மனைவி பேபி (40) உடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.இதனால் அந்த பேபி அவரை திருத்தவும் ,அவரின் குடிப்பழக்கத்தை நிறுத்தவும் பல முயற்சிகள் செய்தார் .ஆனால் அவரின் முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை .அதனால் அவர் கடந்த சனிக்கிழமையன்று அதே ஊரிலிருக்கும் தன்னுடைய சகோதரர் மஜ்னு என்பவரின் வீட்டிற்கு சென்று விட்டார் .இதனால் மிகவும் கோபப்பட்ட அவரின் கணவர் மீண்டும் அதிகமாக குடித்தார் .அதன் பிறகு அவரின் மனைவியிருக்கும் சகோதரர் வீட்டிற்கு சென்றார் .பின்னர் அவரின் வீட்டிற்கு தீ வைத்தார் .இந்த தீ பிடித்து எரிய தொடங்கியதும் அவர் அங்கிருந்து ஓடி விட்டார் .அப்போது அந்த வீட்டிற்குள் 10 பேர் தூங்கி கொண்டிருந்தார்கள் .இந்த தீ விபத்தில் அந்த வீட்டிலிருந்த ஆறு பேர் தீயில் கருகி இறந்தனர்
அந்த ஆறு பேர் அவரது அத்தை எரவரா சீத்தே (45), மஜ்னுவின் இரண்டு மைனர் மகன்கள் – விஸ்வாஸ் (7) மற்றும் பிரகாஷ் (6), உறவினரின் மகள் பிரார்த்தனா (6) மற்றும் மற்றொரு உறவினரின் மகன் விஸ்வாஸ் (6). ஆகியோர் ஆவார்கள் .பிறகு தீக்காயங்களுக்கு ஆளான மற்ற நான்கு பேரும் மைசூரு மற்றும் மடிகேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் .பிறகு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய அவரின் கணவரை கைது செய்ய தேடி வருகின்றனர் .

பிரிந்த மனைவி -எரித்த கணவர் -குடிகாரரால் ஆறு பேருக்கு நேர்ந்த கொடுமை.