ஷீனா போரா கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி… கொரோனா வைரஸை காரணம் காட்டி ஜாமீன் கேட்ட இந்திராணி முகர்ஜி..

 

ஷீனா போரா கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி… கொரோனா வைரஸை காரணம் காட்டி ஜாமீன் கேட்ட இந்திராணி முகர்ஜி..

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த இந்திராணி தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கடந்த 2015ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். இந்திராணி தனது 3வது கணவர் பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவிக்கு பிறந்த மகன் ராகுல் முகர்ஜியை ஷீனா போரா காதலித்ததால் அவரை இந்திராணி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் பீட்டர் முகர்ஜியும் கைது செய்யப்பட்டார்.

ஷீனா போரா கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி… கொரோனா வைரஸை காரணம் காட்டி ஜாமீன் கேட்ட இந்திராணி முகர்ஜி..

ஷீனா போரா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இந்திராணி முகர்ஜி தற்போது மத்திய மும்பையில் பைகுல்லா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் பரவலை காரணம் காட்டி 45 நாட்கள் இடைக்கால ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். மேலும் அந்த மனுவில், கைது செய்யப்பட்ட 2015 ஆகஸ்ட் முதல் நீதிமன்ற காவலில் இருப்பதாகவும், மூளை தமனிகளில் நாள்பட்ட இஸகிமிக் மாற்றங்களால் அவதிப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஷீனா போரா கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி… கொரோனா வைரஸை காரணம் காட்டி ஜாமீன் கேட்ட இந்திராணி முகர்ஜி..

சி.பி.ஐ.யின் சிறப்பு நீதிமன்றம் நேற்று இந்திராணியின் ஜாமீன் மனுவை விசாரித்தது. அப்போது இது தொடர்பாக நாளைக்குள் (26ம் தேதி) பதில் அளிக்கும்படி விசாரரைண அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன் இந்திராணி தாக்கல் செய்த வழக்கான ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு ஜாமீன் மனு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.