`நாம 16,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறோம்!’- விமானத்தில் தமிழில் அறிவித்த சென்னை பைலட்

 

`நாம 16,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறோம்!’- விமானத்தில் தமிழில் அறிவித்த சென்னை பைலட்

சென்னையிலிருந்து மதுரைக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்த கேப்டனின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்தியாவில் தற்போது விமானங்களில் அறிவிப்புகள் ஆங்கிலம், ஹிந்தியிலேயே வெளியிடப்படுகின்றன. இதனால், தமிழகத்தில் விமான பயணங்களின்பொது தமிழில் அறிவிப்பு செய்யவேண்டும் என்று அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தன. இந்த நிலையில், விமான பயணத்தின்போது தமிழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் பைலட். அந்த அறிவிப்பை வெளியிட்டவர் இண்டிகோ விமானத்தில் கேப்டனாக இருப்பவர் பிரிய விக்னேஷ். இவர் வடசென்னையைச் சேர்ந்தவர்.

`நாம 16,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறோம்!’- விமானத்தில் தமிழில் அறிவித்த சென்னை பைலட்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையிலிருந்து மதுரை சென்ற விமானத்தில், தமிழில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் விக்னேஷ். அவர், தமிழில் அறிவிப்பு வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில் பேசும் விக்னேஷ், ‘திருச்சி நகரத்தில் 16,000 அடி உயரத்தில் நாம் பறந்துகொண்டிருக்கிறோம். இன்னும் பத்து நிமிடத்தில் காவிரி ஆறு, காவிரி, கொள்ளிடம் என பிரியும் இடத்தைக் காண முடியும். இந்த இரண்டு ஆறுகளும் பிரியும் இடத்திலுள்ள இடத்துக்கு ஸ்ரீரங்கம் என்று பெயர். நீங்கள், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலைக் காண காணலாம்’ என்று தமிழில் பேசியுள்ளார். விக்னேஷின் இந்த தமிழ் அறிவிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.