லாக்டவுன் காலத்திலும் ரூ.581 கோடிக்கு தங்கம் இறக்குமதி….

 

லாக்டவுன் காலத்திலும் ரூ.581 கோடிக்கு தங்கம் இறக்குமதி….

நம் நாட்டில் திருமணம், வளைகாப்பு, பிறந்தநாள் என எந்தவொரு குடும்ப விழாக்களிலும் தங்கம் பிரதானமாக இருக்கும். மஞ்சள் உலோகமான தங்கம் சிறந்த முதலீடாகவும் கருதப்படுகிறது. மேலும் இக்கட்டான நேரங்களில் நிதி தேவைக்கு கொடுக்கும் என்பதால்தான் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் நம்மவர்கள் வாங்குவது குறையுமே தவிர வாங்காமல் இருக்கமாட்டார்கள்.

லாக்டவுன் காலத்திலும் ரூ.581 கோடிக்கு தங்கம் இறக்குமதி….

அதேசமயம் நம் நாட்டில் தங்கம் உற்பத்தி பெயரளவுக்கே நடைபெறுகிறது. இதனால் உள்நாட்டு தங்க தேவையை பூர்த்தி செய்ய வெளிநாடுகளிலிருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. சர்வதே அளவில் சீனாவுக்கு அடுத்து தங்கம் அதிகம் இறக்குமதி செய்யும் நாடு என்றால் அது நம் நாடுதான். கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக மார்ச் இறுதி வாரம் முதல் மே 3 வரை நம் நாட்டில் நகை கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் தங்க விற்பனை முற்றிலும் முடங்கி போனது.

லாக்டவுன் காலத்திலும் ரூ.581 கோடிக்கு தங்கம் இறக்குமதி….

இதனால் தங்கத்துக்கான தேவை எழவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் 4ம் தேதி முதல் நகை கடைகளை திறந்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனால் தங்க நகை வர்த்தகர்கள் சிறிது நிம்மதி அடைந்தனர். மக்களும் மீண்டும் தங்கத்தை வாங்க தொடங்கினர். இதனையடுத்து தங்கத்துக்கான தேவை மீண்டும் எழுந்தது. கடந்த மே மாதத்தில் வெளிநாடுகளிலிருந்து சுமார் ரூ.581 கோடிக்கு தங்கம் இறக்குமதியானது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 98.4 சதவீதம் குறைவாகும். 2019 மே மாதத்தில் சுமார் ரூ.36 ஆயிரம் கோடிக்கு தங்கம் இறக்குமதியாகி இருந்தது