பாராலிம்பிக்கில் இந்தியா சாதனை : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

 

பாராலிம்பிக்கில் இந்தியா சாதனை : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கங்களை வென்று குவித்த வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக்கில் இந்தியா சாதனை : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளின் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அவனி லெகாரா, வட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் யோகேஷ் கதுனியா, ஈட்டி எறிதலில் வெள்ளி, வெண்கலம் வென்ற தேவேந்திர ஜஜாரியா, சுந்தர்சிங் ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் , பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் வரலாற்று சிறப்புமிக்க தங்கப்பதக்கம் பெற்றுள்ள அவனி லெகாரா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். தாங்கள் படைத்த பெரும் சாதனையால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் யோகேஷ் கதுனியா அவர்களுக்கும், ஈட்டி எறிதலில் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றுள்ள தேவேந்திர ஜஜாரியா, சுந்தர்சிங்குக்கு எனது பாராட்டுக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “டோக்கியோ பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் வென்றதோடு, பாரா ஒலிம்பிக் வரலாற்றிலேயே இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் தங்கம் எனும் மாபெரும் வரலாற்று சாதனையையும் படைத்த அன்பு தங்கமகள் அவனி லெகாரா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்” என்று வாழ்த்தியுள்ளார்.