ஒலிம்பிக் வில்வித்தை காலிறுதி போட்டி : இந்திய அணி அதிர்ச்சி தோல்வி!

 

ஒலிம்பிக் வில்வித்தை காலிறுதி போட்டி : இந்திய அணி அதிர்ச்சி தோல்வி!

ஒலிம்பிக் வில்வித்தை காலிறுதி போட்டியில் தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் அணி தென்கொரியாவிடம் தோல்வியை தழுவியது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா நேற்று தொடங்கியது. இன்று காலை முதல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் ஜோடி களமிறங்கியது. அபாரமாக விளையாடிய இருவரும் சீன தைபே அணியை 5-3 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

ஒலிம்பிக் வில்வித்தை காலிறுதி போட்டி : இந்திய அணி அதிர்ச்சி தோல்வி!

இதையடுத்து, தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் ஜோடி தென் கொரிய அணியை எதிர்த்து காலிறுதி போட்டியில் களமிறங்கியது. வீரர்கள் சற்று தடுமாறிவிட்டனர். இந்தியாவை 6 – 2 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு தென் கொரியா முன்னேறியது. உலக கோப்பைகளில் 9 தங்கம், 12 வெள்ளி, 7 விண்கலங்கள் வென்று குவித்த தீபிகா குமாரியும் பிரவீன் ஜாதவ்வும் தென் கொரியாவிடம் தோல்வியை தழுவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.