கள்ளக்காதலனை நம்பி வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! கொன்று புதைத்ததை மோப்பமிட்டு காட்டிக்கொடுத்த நாய்

பெண்ணைக் கொன்று புதைத்து அதன் அருகில் அடுப்பு வைத்து வெந்நீர் காய்ச்சிய வந்த கள்ளகாதலனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் நகரில் சிக்னல் காலனியில் ராமுலு - லட்சுமி தம்பதி மகன் கோபி, மகள் துர்கா, மருமகன் மஹேந்தர் ஆகியோர் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்த குடும்பத்தினர் மஹபூபாபாத் நகரில் காகிதங்களை சேகரித்து அதனை விற்று குடும்பம் நடத்தி வந்தனர். இந்த சூழலில் கோபி சில மாதங்களுக்கு முன்பு பையாரம் மண்டலத்தில் உள்ள லட்சுமிநரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாகமணியை (35) சந்தித்தார். நாகமணி ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இருப்பினும், நாகமணி அவர்களை விட்டுவிட்டு கோபியுடன் வந்துவிட்டார்.
இந்நிலையில் நாகமணி - கோபி இடையே சில நாட்களுக்கு முன் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையால் கோபி, தனது தாய் லட்சுமி, தந்தை ராமுலு மற்றும் தங்கை துர்கா, மாப்பிள்ளை மஹாந்தர் ஆகியோருடன் சேர்ந்து பத்து நாட்களுக்கு முன்பு நாகமணியை அடித்து கொலை செய்தார். கொலைக்கு பின்னர் நாகமணி சடலத்தை வாடகை வீட்டின் வளாகத்தில் புதைத்தனர். இது தெரியாமல் இருக்க புதைக்கப்பட்ட அதே இடத்தில் மாட்டு சாணத்தைக் பூசி அடுப்பு வைத்து சமைத்தார்கள். இந்நிலையில் நாகமணி புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியதோடு தெரு நாய்கள் அந்த பகுதியை சுற்றி சுற்றி வந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் நாகமணியும் சில நாட்களாக காணாமல் போனதால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் தேவேந்தர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் வளாகத்தை ஆய்வு செய்தனர். நாகமணி கொல்லப்பட்டு வீட்டின் வளாகத்தில் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் துர்நாற்றம் வந்த பகுதியில் தோண்டி பார்த்தபோது இறந்த உடல் மீட்கப்பட்டது. இதனையடுத்து மஹபூபாபாத் எஸ்.பி. சுதிர் ராம்நாத் சம்பவ இடத்தை ஆய்வு செய்து தடவியியல் குழுவினர் வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். முன்கூட்டியே போலீசார் வருவதை அறிந்த கோபி மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவான நிலையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.