உக்ரைனிலிருந்து திம்பிய மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர முடியாது. ஆனால்..! - இந்திய மருத்துவ கவுன்சில்..

 
 உக்ரைனிலிருந்து திம்பிய மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர முடியாது.  ஆனால்..! - இந்திய மருத்துவ கவுன்சில்..

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள்  வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிப்பை தொடர தேசிய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் அவர்கள் இந்தியாவில்  படிப்பை தொடர முடியாது என்றும் தெரிவித்திருக்கிறது.  

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம்  தேதி தாக்குதலைத் தொடங்கியது.  இதன் காரணமாக அங்கு படித்துக்கொண்டிருந்த 20, 000 இந்திய மாணவர்கள் அவசர அவசரமாக தாய்நாடு அழைத்து வரப்பட்டனர்.  6 மாதங்களைக் கடந்து அங்கு போர் நடைபெற்று வருவதால்,  மருத்துவ மாணவர்களின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது.  இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களிலேயே அவர்கள் மருத்துவக் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை மாணவர்களும், அவர்களது  பெற்றோரும் வலியுறுத்தி வந்தனர்.   ஆனால் இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளிக்காமல் மௌனம் சாதித்து வந்தது.  

 உக்ரைனிலிருந்து திம்பிய மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர முடியாது.  ஆனால்..! - இந்திய மருத்துவ கவுன்சில்..

இதனையடுத்து மாணவர்கள் தரப்பு நீதிமன்றத்தை நாடியது.  இதற்கிடையே  இந்திய மருத்துவ கவுன்சிலும்,   வெளியுறவு  அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி வந்தது.  இந்த நிலையில்  தேசிய மருத்துவ ஆணையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டிருக்கிறது.  அதில்,  உக்ரைன் பல்கலைக்கழகங்களில் படித்த இந்திய மருத்துவ மாணவர்கள், வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தங்களது படிப்பை தொடரலாம் என்றும்,  மாணவர்கள் நேரடியாக புதிய செமஸ்டரில் இணைந்து  படிப்பைத் தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளது.

மருத்துவ படிப்புகள்

மேலும், மாணவர்கள்  தற்போது படித்து வந்த பல்கலைக்கழகங்களே இதற்கான வசதிகளை  செய்து தரும் என்றும்,  அவ்வாறு  மற்ற நாடுகளில் மருத்துவ படிப்பை தொடரும்  மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட உக்ரைன்  பல்கலைக்கழகங்களே பட்டப்படிப்புக்கான சான்றிதழ் வழங்கும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.  மத்திய  வெளியுறவு அமைச்சகத்துடன் கலந்து ஆலோசித்து, தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரம்  வழங்கியிருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியானால்  இந்தியாவிலேயே மருத்துவ படிப்பை தொடரலாமா என்கிற கேள்வி மருத்துவ மாணவர்களிடையே எழுந்துள்ளது. ஆனால்  ‘உக்ரைனில் மருத்துவம்  படித்த மாணவர்கள், இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும்,  தற்போதைய அறிவிப்பானது, மாணவர்கள் படிப்பை தொடர்வதற்கான இடமாற்ற அறிவிப்பு என்றே கருதமுடியும் என இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் கூறுகின்றனர்.