இந்தியாவில் உயரும் கொரோனா பலி எண்ணிக்கை - அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!!

 
corona death

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா முதல், இரண்டாம் அலையால் பலரும் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுள்ளனர். அத்துடன் லட்சக்கணக்கான பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இன்னும் கொரோனா இரண்டாம் அலை ஓயாத நிலையில், மூன்றாம் அலை ஏற்படாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

corona

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில்  11,919  பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று 10,197 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் 11 ஆயிரத்தை தொற்று பாதிப்பு கடந்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,44,78,517 ஆக உள்ளது.  அத்துடன் ஒரேநாளில் 470 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று 301 பேர் பலியான நிலையில் இன்று மீண்டும் கொரோனா உயிரிழப்பு வெகுவாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 4,64,622 ஆக உள்ளது. 

corona death

அத்துடன் தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டு 1,28,762 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 11,242   ஆக உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,38,85,132ஆக உயர்ந்துள்ளது.