முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு - பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் உடனடியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், மன் மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், இன்று நடக்கவிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், மன்மோகன் சிங் மறைவுவுக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், நாட்டின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங் உயிரிழந்த செய்தி வருத்தமளிக்கிறதுஅவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என குறிப்பிட்டுள்ளார். இதேபோல் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், மன்மோகன் சிங் இந்தியாவை மகத்தான ஞானத்துடனும் நேர்மையுடனும் வழிநடத்தினார்நான் ஒரு ஆலோசகர் மற்றும் வழிகாட்டியை இழந்துவிட்டேன் அவரைப் போற்றிய கோடிக்கணக்கான மக்கள் அவரை மிகவும் பெருமையுடன் நினைவு கூர்வோம் என குறிப்பிட்டுள்ளார்.