மசூதி கட்டும் விவகாரத்தில் இரு தரப்பினரிடையே மோதல்- பாஜக நிர்வாகியின் காருக்கு தீ

 
fire

ஆந்திர மாநிலம் கர்னூலில் மசூதி கட்டும் விவகாரத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஆத்மகூரில்  மசூதி கட்டுவது தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த ஸ்ரீ சைலம் தொகுதி  பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் புத்த ஸ்ரீகாந்த் ரெட்டியின் வாகனம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஸ்ரீகாந்த் ரெட்டியை பாதுகாப்பாக காவல்  நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து காவல் நிலையத்தை முற்றுகையிட்ட சிறுபான்மையினர் ஸ்ரீகாந்த் ரெட்டியின் வாகனத்தை கவிழ்த்து காவல் நிலையத்தின் முன்பே ஸ்ரீகாந்த் ரெட்டி காருக்கு தீ வைத்து கொளுத்தி காவல் நிலையத்தின் மீது கற்களை வீசி தாக்கினர்.  


கலவரகாரர்களை கலைக்க முயன்றும் முடியாததால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி இரு பிரிவினரையும் கலைத்தனர். இருப்பினும் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆந்திர மாநில டி.ஜி.பி. கெளதம் சவாங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைதியான கர்னூல் மாவட்டத்தில் மதவெறியை தூண்ட சிலர் வேண்டுமென்றே முயற்சி செய்கிறார்கள். அவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். ஆத்மகூர் சம்பவத்திற்குப் பிறகு உடனடியாக அப்பகுதிக்கு சென்று நிலைமையைக் கண்காணிக்க மாவட்ட எஸ்பிக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளேன். தற்போதைக்கு நிலைமை முற்றிலும் கட்டுக்குள் உள்ளது. மதவெறியை, மத கலவரத்தை தூண்ட முயன்றால் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.