கணவரை அடித்து துரத்திவிட்டு கர்ப்பிணியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

 
rape

ஆந்திர மாநிலம் பாபட்லாவில் கணவரை அடித்து துரத்திவிட்டு ரயில்நிலைய பிளாட்பார்மில் குழந்தைகளுடன் இருந்த கர்பிணி பெண்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Class 12 girl drugged, gang-raped by four men in West Bengal's Hooghly -  Crime News

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், எர்ரகொண்டபாலயம் மண்டலம், வெங்கடாத்ரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கட்டிட வேலைக்காக கிருஷ்ணா மாவட்டம் நாகயலன்கா செல்வதற்கு பாபட்லா மாவட்டம்,  ரெபள்ளே ரயில் நிலையத்திற்கு ரயிலில்  வந்தனர். இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ள நிலையில் மூன்று குழந்தைகளுடன் சனிக்கிழமை இரவு, ரெபள்ளே ரயில் நிலையத்திற்கு தம்பதிகள் இருவரும் நள்ளிரவு வந்ததால் ரயில் நிலையத்தில் இரவு தங்கி காலை விடிந்ததும் நாகயலன்கா செல்லலாம் என முதலாவது பிளாட்பாமில் தூங்கினார்.  

அப்போது நள்ளிரவு 1 மணி அளவில் அங்கு மது போதையில் வந்த சிறுவர் உட்பட 3 பேர் பிளாட்பாரமில் யாரும் இல்லாததால் கணவரை அடித்து துரத்தி விட்டு குழந்தைகள் கண்முன்னே ஏற்கனவே கர்ப்பமாக இருந்த பெண்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். கணவர் உடனடியாக ரயில்வே போலீசாரை தொடர்பு கொண்டார். ஆனால் கணவர் போலீசாரை அழைத்து வருவதற்குள் மர்ம நபர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். 

உடனடியாக போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  ரயில் நிலையத்தில் கர்ப்பிணி பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த  ரெப்பள்ளே நகரம், நேதாஜி நகரை சேர்ந்த சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.