#JUSTIN டெல்லியில் ராகுல் காந்தி கைது!!

 
tn

டெல்லியில் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறையினர் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார். 

tn

நேஷனல் ஹெரால்டு வழக்கில் இரண்டாவது முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று ஆஜரானார். அவரிடம் அமலாக்க துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இதனிடையே அமலாக்க துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.  நாடாளுமன்றம் கூடியதுமே சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை, ஜிஎஸ்டி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி காங்கிரஸ் எம்.பி.க்கள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

tn

 நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து ராகுல் காந்தி தலைமையில் வெளியேறிய காங்கிரஸ் எம்.பி.க்கள் குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணையாக சென்றனர் . இதையடுத்து  விஜய் சவுக்  பகுதியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால்  காங்கிரஸ் எம்.பி.க்கள் உடன் சாலையில் அமர்ந்து ராகுல் காந்தி தர்மாவில் ஈடுபட்டார் . போராட்டத்தை கைவிட கோரி அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர் போராட்டத்தை கைவிட மறுப்பு தெரிவித்தார்.  தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயற்சி செய்த  நிலையில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.