புதிய ஐ.டி. விதிகள் மூலம் சமூக ஊடகங்களை மத்திய அரசு கைப்பற்றுகிறது என்ற கபில் சிபலின் கருத்துக்கள் தவறானவை..

 
மக்களை காட்டிலும் பசுக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆளும் கட்சி…… பா.ஜ.க.வை வெளுத்து வாங்கிய கபில் சிபல்….

புதிய ஐ.டி.  விதிகள் மூலம் சமூக ஊடகங்களை மத்திய அரசு கைப்பற்றுகிறது என்ற கபில் சிபலின் கருத்துக்கள் தவறானவை என்று பிரஸ் இன்பர்மேஷன் பீரோ தெரிவித்துள்ளது.

நம் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் அமலுக்கு வந்தது. இந்த புதிய விதிகளின்படி, சமூக ஊடக தளங்கள் தகுந்த விடா முயற்சியை செய்வதற்கும், சட்டவிரோத உள்ளடகத்தை அவர்களாகவே அகற்றுவதற்கு நியாயமான முயற்சிகளை மேற்கொள்வதற்கும் அதிக பொறுப்பை கொண்டிருக்கும். சமூக ஊடக தளங்கள் சில சர்ச்சைக்குரிய உள்ளடகத்தை புகாரளித்த 72 மணி  நேரத்துக்குள் அகற்றுவதற்கு விதிகள் வழிசெய்கின்றன.

சமூக வலைதளங்கள்

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் குறித்து முன்னாள் காங்கிரஸ்காரான கபில் சிபல் செய்தியாளர்களிடம்  பேசுகையில், அரசுக்கு பாதுகாப்பானது மற்றவர்களுக்கு பாதுகாப்பற்றது என்பதுதான் இந்த அரசின் கொள்கை. சாதாரண மக்களுக்கு எஞ்சியிருக்கும் ஒரே தளம் சமூக ஊடகங்கள். அவதூறான அறிக்கைகள் வெளியிடப்பட்டால் மக்கள் மீது (புதிய விதிகளின் கீழ்) வழக்கு தொடரப்படும்.

மத்திய அரசு

முதலில் அவர்கள் (பா.ஜ.க. தலைமையிலான அரசாங்கம்) டி.வி. நெட்வொர்க்குகளை பிடித்தனர். இப்போது அவர்கள் சமூக ஊடக தளங்களை பிடிக்கப் போகிறார்கள். இது ஊடகங்களின் விரிவான கைப்பற்றல். நாம் ஒரே நடத்தை விதிகள், ஒரு அரசியல் கட்சி, ஒரே ஆட்சி முறையை நோக்கி நகர்கிறோம், யாருக்கும் பதில் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அதேசமயம் கபில் சிபலின் கருத்துக்களை மத்திய அரசின் நோடல் ஏஜென்சியான பிரஸ் இன்பர்மேஷன் பீரோ சரிபார்த்து, கபில் சிபலின் கருத்துக்கள் தவறானவை என தெரிவித்துள்ளது.