17வது ஜி20 மாநாடு - இந்தோனேசியா புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி

 
modi

17வது ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தோனேசியாவின் பாலி நகருக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றுள்ளார்.

ஜி-20 நாடுகளின் 17 வது உச்சி மாநாடு இந்தோனேசியாவில் பாலி நகரில் நாளை தொடங்கி இரண்டு தினங்கள் நடைபெறுகின்றன. இதில் எரிசக்தி பாதுகாப்பு, உணவு,  டிஜிட்டல் மாற்றம் மற்றும் சுகாதாரம் ஆகிய மூன்று முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார் .  உலக பொருளாதாரம் , எரிசக்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் மற்ற நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி விவாதிக்க உள்ளார்.  அது மட்டுமல்லாமல் ஜி 20 தலைவர்கள் சிலரையும் பிரதமர் மோடி சந்தித்து பேச இருக்கிறார். இந்த சந்திப்பின் போது உக்ரைன் - ரஷ்யா போரால் உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பற்றாக்குறை குறித்து பிரதமர் மோடி பேசுவார் என கூறப்படுகிறது. 

இந்நிலையில், இந்த மாநாட்டில் கலந்துகொள்ள டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இந்தோனேசியாவின் பாலி நகருக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றுள்ளார். ஜி20 மாநாட்டில் சுற்றுசூழல், சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேச உள்ளார். மாநாட்டில் பொருளாதாரம், எரிசக்தி, விவசாயம் உள்ளிட்டவை குறித்து உலகத்தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.