வாட்டி வதைக்கும் வெயில் : ஒடிசாவில் காலை 6 மணிக்கு பள்ளி திறப்பு!!

 
tn

காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும் என்று அறிவிப்பு இன்றுமுதல் ஒடிசாவில் அமலுக்கு வந்துள்ளது.

tn

கோடை காலம் தொடங்கி விட்டதால் நாடு முழுவதும் வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. நாளை மறுநாள் அக்னி வெயில் தொடங்கவுள்ளதால் வெயில் வறுத்தெடுக்கும். இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்பம் நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது . குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் வழக்கத்தைவிட கடுமையான வெயில் மக்களை வதைக்கிறது,  இந்த சூழலில் மாநில அரசுகள்,  பள்ளி மாணவர்களுக்கு உடனடியாக விடுமுறை அளிக்க வேண்டும்  அல்லது பள்ளி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

tn
இந்நிலையில் கடும் வெயில் காரணமாக ஒடிசா மாநிலத்தில் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.  வெயில் காரணமாக பள்ளிகள் செயல்படும் நேரத்தை இன்று முதல் மாற்றியமைத்து மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனாலும் வெவ்வேறு வாரியங்கள் மற்றும் கவுன்சில்களால் ஏற்கனவே திட்டமிட்டபடி தேர்வு வழக்கம் போல தொடரும் என்று அரசு தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.