பிரபல ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டு செவிலியர் உயிரிழப்பு - 20 பேருக்கு சிகிச்சை

 
rஎ

ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்டு உயிரிழந்துள்ளார் அரசு மருத்துவமனை செவிலியர்.  மேலும் 20 பேர் வாந்தி ,வயிற்றுப் போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  கேரள மாநிலத்தில் கோட்டயம் பகுதியில் நடந்துள்ளது இந்த சம்பவம். 

 கேரள மாநிலத்தில் கோட்டையம் பகுதியைச் சேர்ந்தவர் ரேஷ்மி.  இவர் அரசு மருத்துவமனையில் செவிலியர் ஆக பணிபுரிந்து வந்துள்ளார்.  சில தினங்களுக்கு முன்பு கோட்டயத்தில் உள்ள பிரபல உணவகத்தில் அல்பாமா சிக்கன் சாப்பிட்டு இருக்கிறார்.   மந்தி பிரியாணி சாப்பிட்டிருக்கிறார். 

ம

 மந்தி பிரியாணி சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே வாந்தி , வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருக்கிறது.  இதை அடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.  ஆனாலும் தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்து வந்திருக்கிறது . மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருக்கிறார். 

 அதே உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 20 பேருக்கும் மேல் வாந்தி , வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  செவிலியர் உயிரிழந்ததை அடுத்து பிரியாணி சாப்பிட்ட உணவகத்திற்கு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.  உணவு விஷமானதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இந்த சம்பவத்தை அடுத்து கோட்டயத்தில் இருக்கும் அனைத்து உணவகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.  சுகாதாரத்துறை அமைச்சர் வீனா சார்ஜ் உத்தரவின் பெயரில் இந்த சோதனை நடந்தது . கேரளாவில் உள்ள 429 உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  இதில் 43 நிறுவனங்களை மூட உத்தரவு இடப்பட்டுள்ளது.  138 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  40 உணவகங்களில் இருந்து உணவு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.  மந்தி பிரியாணி சாப்பிட்டு செவிலியர் உயிர் இழந்த சம்பவம் பிரியாணி பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.