இந்தியாவில் 4 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!!
இந்தியாவில் நேற்றை காட்டிலும் கொரோனா பாதிப்பு இன்று மேலும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 3,275 பேருக்கும், நேற்று 3,545 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது . இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 98 ஆயிரத்து 743ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 22 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,24, 024 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவிலிருந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4, 25, 54,416 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை இந்தியாவில் பேர் 20,303 கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் கொரோனாவிற்கு எதிரான ஆயுதமாக பார்க்கப்படும் தடுப்பூசியானது இந்தியாவில் மேலும் 17,49,063பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 190 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.