பஞ்சாப் மாநிலத்தில் நிலநடுக்கம்
Nov 14, 2022, 08:06 IST1668393379843
பஞ்சாப் மாநிலத்தில் இன்று 14.11.2022 ல் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3. 42 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் நகரில் இன்று அதிகாலையில் 3. 42 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆனது 4.1 ரிக்டர் அளவுகோல் ஆக பதிவாகி இருக்கிறது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் அமிர்தசரஸ் நகரில் இருந்து 145 கிலோ மீட்டர் வடமேற்கில் சுமார் 120 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த நில நடுக்கத்தினால் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்கிறது முதற்கட்ட தகவல்கள்.