தெலங்கானாவில் ஜூன் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!
Apr 6, 2020, 19:13 IST1586180631000
இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது. அதேபோல் தமிழகத்தில் 621பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய நிலவரப்படி 5 பேர் பலியாகினர். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தெலங்கானாவில் 321 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளனர்,மேலும் 34 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் ஏப்.14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தெலங்கானாவில் ஜூன் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார்.