இந்தியா ஒரே நாளில் 4 பதக்கங்கள் வென்று சாதனை – ராமதாஸ் பாராட்டு!

 

இந்தியா ஒரே நாளில் 4 பதக்கங்கள் வென்று சாதனை – ராமதாஸ் பாராட்டு!

பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஒரே நாளில் 4 பதக்கங்கள் வென்றுள்ள நிலையில் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா ஒரே நாளில் 4 பதக்கங்கள் வென்று சாதனை – ராமதாஸ் பாராட்டு!

டோக்கியோ பாராலிம்பிக் போட்டி தொடரில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அவனி லெகாரா தங்கப் பதக்கம் வென்றுள்ள நிலையில் பாராலிம்பிக் ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீர‌ர் யோகேஷ் கத்துனியா வெள்ளி பதக்கம் வென்றார்.அதேபோல் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர்கள் தேவேந்திரா 64.35 மீட்டர் தூரம் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கமும், சுந்தர் சிங் வெண்கலப் பதக்கமும் வென்றனர். இதன் மூலம் இந்தியாவுக்கு ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என இந்தியா 7 பதக்கங்கள் கிடைத்துள்ளது.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளின் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அவனி லெகாரா, வட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் யோகேஷ் கதுனியா, ஈட்டி எறிதலில் வெள்ளி, வெண்கலம் வென்ற தேவேந்திர ஜஜாரியா, சுந்தர்சிங்குக்கு வாழ்த்துகள்! பாரா ஒலிம்பிக் போட்டிகளில் ஒரே நாளில் இந்தியா 4 பதக்கங்களை வென்றது இதுவே முதல்முறை; இந்தியா அதிக பதக்கங்களை வென்றிருப்பதும் இந்தப் போட்டியில் தான். இந்தியா பெருமை கொள்வதற்கு காரணமான சாதனையாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்”! என்று பதிவிட்டுள்ளார்.