இந்தியா- பிரிட்டன் இடையே ஜன.6 முதல் விமான சேவை!

 

இந்தியா- பிரிட்டன் இடையே ஜன.6 முதல் விமான சேவை!

தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியா- பிரிட்டன் விமான சேவை மீண்டும் தொடங்கப்படவிருப்பதாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு ஜனவரி 6ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்குகிறது. பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு 8ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கும். இந்தியா, பிரிட்டன் இடையே வாரத்திற்கு 30 விமானங்கள் இயக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தியா- பிரிட்டன் இடையே ஜன.6 முதல் விமான சேவை!

வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்களுக்கு கடந்த 31ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தடை 7ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. கொரோனா பரவல் அதிகரித்தால் தடை மேலும் நீடிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இத்தகைய சூழலில், விமான போக்குவரத்து துறை வெளியிட்டிருந்த அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டு தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.