40 லட்சம் பாதிப்பை நெருங்கும் இந்தியா – உலகளவில் கொரோனா நிலவரம்
கொரோனாவின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. செப்டம்பர் 4-ம் தேதி நிலவரப்படி நிலவரப்படி, உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 64 லட்சத்து 68 ஆயிரத்து 013 பேர்.
கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 86 லட்சத்து 61 ஆயிரத்து 847 நபர்கள்.
கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 8 லட்சத்து 73 ஆயிரத்து 221 பேர். இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.
தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 69,32,945 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர் லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.
கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில் 63,35,244 பேரும், பிரேசில் நாட்டில் 40,46,150 பேரும் இந்தியாவில் 39,33,124 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
சமீபமாக தினந்தோறும் இந்தியாவில் 80,000 புதிய நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில் இன்று மாலை அறிவிப்பின்போது 40 லட்சத்தைக் கடக்கும் அபாயம் இருக்கிறது.
இது இன்றைய நிலவரம், நேற்றைய நிலவரத்தின் அப்டேட்டில் பார்க்கும்போது, புதிய நோயாளிகள் அதிகரித்திருப்பது உலகளவில் இந்தியாவில்தான் என்கிற அதிர்ச்சி தகவல் தெரிகிறது.
அமெரிக்காவில் 44,507 பேரும், பிரேசிலில் 44,728 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 84,156 பேராக அதிகரித்துள்ளனர். நேற்று இறந்தோர் எண்ணிக்கையும் அமெரிக்கா, பிரேசில் நாடுகளை விடவும் இந்தியாவில் அதிகம்.