இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,18, 447ஆக உயர்வு!
May 22, 2020, 09:24 IST1590119658000
இதுவரை உலகம் முழுவதும் 51 லட்சத்து 89ஆயிரத்து 488 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 3லட்சத்து 34ஆயிரத்து 092 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 20லட்சத்து 78 ஆயிரத்து 561 பேர் குணமாகியுள்ளனர். இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 1,18,447 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 48,534 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,583 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.