இந்தியாவில் ஒரேநாளில் 9971 பேருக்கு கொரோனா பாதிப்பு – 287 பேர் உயிரிழப்பு

 

இந்தியாவில் ஒரேநாளில் 9971 பேருக்கு கொரோனா பாதிப்பு – 287 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 9971 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 9971 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரேநாளில் அதிகபட்ச கொரோனா பாதிப்பாக இந்தியாவில் பதிவாகியுள்ளது. மேலும் நேற்று ஒரேநாளில் இந்தியாவில் 287 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் 1,20,406 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். மேலும் 1,19,293 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகியுள்ளனர். நாட்டில் கொரோனாவால் 6929 பேர் இதுவரை இறந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 2,46,628 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவரங்களை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.