ஒரே நாளில் 2,330 பேர் பலி : மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு!

 

ஒரே நாளில்  2,330 பேர் பலி : மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் 71 நாட்களுக்குப் பிறகு சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

ஒரே நாளில்  2,330 பேர் பலி : மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு!

இந்நிலையில் இந்தியாவில் ஒரேநாளில் 67,208 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் 60ஆயிரம், நேற்று 62ஆயிரமாக இருந்த பாதிப்பு இன்று 67 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2,96,33,105லிருந்து 2,97,00,313 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் 1,03,570 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்.

ஒரே நாளில்  2,330 பேர் பலி : மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,83,88,100 லிருந்து 2,84,91,670 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 95.80%; உயிரிழப்பு விகிதம் 1.28%ஆக உள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 2,330 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 3,79,573லிருந்து 3,81,903 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,26,740 ஆக குறைந்துள்ளது.