கடந்த 88 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைந்த கொரோனா…ஒரே நாளில் 1422 பேர் பலி!

 

கடந்த 88 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைந்த கொரோனா…ஒரே நாளில் 1422 பேர் பலி!

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 53,256 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 88 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைந்த கொரோனா…ஒரே நாளில் 1422 பேர் பலி!

இந்தியாவில் 14 வது நாளாக ஒரு லட்சத்திற்கும் கீழ் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 53,256 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 60 ஆயிரம் , நேற்று 58 ஆயிரமாக இருந்த பாதிப்பு இன்று 53 ஆயிரமாக குறைந்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 88 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த பாதிப்பு 2,99,35,221ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 1422 உயிரிழந்த நிலையில் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 3,88,135 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 88 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைந்த கொரோனா…ஒரே நாளில் 1422 பேர் பலி!

அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் 78,190 கொரோனாவிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இதுவரை 2,88,44,199 பேர் கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளனர். 7,02,887 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 28,00,36,898 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.