ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பலி : ஒரே நாளில் 46,148 பேருக்கு பாதிப்பு !!

 

ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பலி : ஒரே நாளில்  46,148 பேருக்கு பாதிப்பு !!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பலி : ஒரே நாளில்  46,148 பேருக்கு பாதிப்பு !!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே 50ஆயிரத்திற்கும் கீழாக கொரோனா பாதிப்பு பதிவாகி வரும் நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 46,148 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,02,33,183 லிருந்து 3,02,79,331ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,02,79,331ஆக அதிகரித்துள்ளது.

ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பலி : ஒரே நாளில்  46,148 பேருக்கு பாதிப்பு !!

அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் 979 பேர் கொரோனாவால் பலியான நிலையில் இதுவரை கொரோனா தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,96,730 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவிலிருந்து ஒரேநாளில் 58,578 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இதுவரை 2,93,09,607 பேர் குணமாகியுள்ளனர்.கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 96.80% ஆக உள்ளது. அத்துடன் தற்போது 5,72,994 ஆக குறைந்துள்ளது