இந்தியாவில் ஒரேநாளில் 39,361 பேருக்கு கொரோனா ; 416 பேர் உயிரிழப்பு!

 

இந்தியாவில் ஒரேநாளில் 39,361 பேருக்கு கொரோனா ; 416 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 35,968 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒரேநாளில் 39,361 பேருக்கு கொரோனா ; 416 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு 39,361 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் 35,968 பேர் கொரோனவிலிருந்து மீண்டு குணமாகியுள்ளனர். அதேசமயம் கடந்த 24 மணிநேரத்தில் 416 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதுவரை மொத்தமாக கொரோனாவிலிருந்து குணமாகினோர் எண்ணிக்கை 3,05,79,106 ஆக அதிகரித்துள்ளது . அதேபோல் 4,20,967 பேர் இதுவரை ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ள நிலையில் 4,11,189 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் கொரோனாவுக்கு எதிராக போராட கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியை இதுவரை 43,51,96,001 பேர் இந்தியாவில் செலுத்தி கொண்டுள்ளனர்.