குறையும் கொரோனா : நிம்மதி பெருமூச்சு விடும் மத்திய, மாநில அரசுகள்!!

 

குறையும் கொரோனா : நிம்மதி பெருமூச்சு விடும் மத்திய, மாநில அரசுகள்!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33,376 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று கொரோனா பாதிப்பு 34,973 ஆக இருந்த நிலையில் இன்று தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் குறைய தொடங்கியள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 3,32,08,330 ஆக அதிகரித்துள்ளது.

குறையும் கொரோனா : நிம்மதி பெருமூச்சு விடும் மத்திய, மாநில அரசுகள்!!

அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 308 பேர் பலியாகிய நிலையில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,42,317 ஆக அதிகரித்துள்ளது. நேற்று கொரோனா பலி எண்ணிக்கை 260 ஆக இருந்த நிலையில் இறப்பு எண்ணிக்கையும் குறைய தொடங்கியுள்ளது.

குறையும் கொரோனா : நிம்மதி பெருமூச்சு விடும் மத்திய, மாநில அரசுகள்!!

கடந்த 24 மணிநேரத்தில் 32,198 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவிலிருந்து 3,23,74,497 குணமாகியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது 3,91,516 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 65,27,175 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ள நிலையில் இதுவரை 73,05,89,688 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.