குறைய தொடங்கியது கொரோனா : சுகாதாரத்துறையின் ரிப்போர்ட் இதோ!!

 

குறைய தொடங்கியது கொரோனா : சுகாதாரத்துறையின் ரிப்போர்ட் இதோ!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,591 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று கொரோனா பாதிப்பு 33,376 ஆக இருந்த நிலையில் மேலும் 30 ஆயிரத்திற்கும் கீழ் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 3,32,36,921 ஆக அதிகரித்துள்ளது.

குறைய தொடங்கியது கொரோனா : சுகாதாரத்துறையின் ரிப்போர்ட் இதோ!!

அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 338 பேர் பலியாகிய நிலையில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,42,655 ஆக அதிகரித்துள்ளது. நேற்று கொரோனா பலி எண்ணிக்கை 308 ஆக இருந்த நிலையில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

குறைய தொடங்கியது கொரோனா : சுகாதாரத்துறையின் ரிப்போர்ட் இதோ!!

கடந்த 24 மணிநேரத்தில் 34,848 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவிலிருந்து 3,24,09,345 குணமாகியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது 3,84,921 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 72,86,883 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ள நிலையில் இதுவரை 73,82,07,378 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.