இந்தியாவில் குறையும் கொரோனா : ஒரே நாளில் 4.22 லட்சம் பேர் குணமாகினர்!

 

இந்தியாவில் குறையும் கொரோனா : ஒரே நாளில் 4.22 லட்சம் பேர் குணமாகினர்!

இந்தியாவில் ஒரேநாளில் 2,63,533 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. காரணம் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்து நடைமுறையில் உள்ளது. இதனால் கடந்த மூன்று நாட்களாக தொற்று பரவல் சற்று குறைந்துள்ளது.

இந்தியாவில் குறையும் கொரோனா : ஒரே நாளில் 4.22 லட்சம் பேர் குணமாகினர்!

இந்நிலையில் இந்தியாவில் ஒரேநாளில் 2,63,533 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் 3.11 லட்சம், நேற்று 2.81 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 2.63 லட்சமாக குறைந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு 2,49,65,463லிருந்து 2,52,28,996 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 24மணிநேரத்தில் 4,329 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் குறையும் கொரோனா : ஒரே நாளில் 4.22 லட்சம் பேர் குணமாகினர்!

இதன் மூலம் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 2,74,390லிருந்து 2,78,719 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக கொரோனா செய்திகளில் இன்று ஆறுதல் அளிக்க கூடியது என்னவென்றால் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரேநாளில் 4,22,436 பேர் கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளனர். இதன் மூலம் கொரோனவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை 2,15,96,512 ஆக அதிகரித்துள்ளது.