இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

 

இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

இதுவரை உலகம் முழுவதும் 82லட்சத்து 56 ஆயிரத்து 257 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 4லட்சத்து 45 ஆயிரத்து 937 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 43 லட்சத்து 6 ஆயிரத்து 89 பேர் குணமாகியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 3,43,091 லிருந்து 3,54,065  ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,86,935 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,903  ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 10,974 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 2,003 பேர் உயிரிழந்துள்ளனர்.  மகாராஷ்டிராவில் இதுவரை 1,13,445 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 57,854 பேர் குணமடைந்துள்ள நிலையில், 5,537 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்