‘உச்சத்தை தொடும் கொரோனா’ இன்றைய நிலவரம் இதோ!

 

‘உச்சத்தை தொடும் கொரோனா’ இன்றைய நிலவரம் இதோ!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,84,372 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘உச்சத்தை தொடும் கொரோனா’ இன்றைய நிலவரம் இதோ!

இந்தியாவில் கடந்த 2020 மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா தற்போது வரை முடிவுக்கு வராமல் உள்ளது . கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு இந்தியாவில் கட்டுக்குள் இருந்த நிலையில், மீண்டும் கடந்த மாதம் முதல் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் முழுவதும் முழுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை என்றாலும் மாநில வாரியாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

‘உச்சத்தை தொடும் கொரோனா’ இன்றைய நிலவரம் இதோ!

இந்நிலையில் இந்தியாவில் மேலும் 1,84,372 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா மொத்த பாதிப்பு 1,38,73,825 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 1,027 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,72,085 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து 1,23,36,036 பேர் குணமாகியுள்ள நிலையில், 13,65,704 பேர் சிகிச்சையில் உள்ளனர். அத்துடன் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசியை 11,11,79,578 பேர் எடுத்துக்கொண்டுள்ளனர்.