கொரோனாவில் புதிய உச்சத்தைத் தொட்ட இந்தியா! ஒரே நாளில் 77,266 பேருக்கு பாசிடிவ்

 

கொரோனாவில் புதிய உச்சத்தைத் தொட்ட இந்தியா! ஒரே நாளில் 77,266 பேருக்கு பாசிடிவ்


கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் இந்தியா புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 77,266 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 77,266 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று இது 75,760 ஆக இருந்தது. நேற்று ஒரே நாளில் 1057 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவில் புதிய உச்சத்தைத் தொட்ட இந்தியா! ஒரே நாளில் 77,266 பேருக்கு பாசிடிவ்


இதன் மூலம் இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 33,87,501 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 61,529 ஆக உள்ளது. 7,42,023 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதே போன்று உயிரிழப்பு தொடர்ந்தால் நாளைக்குள் இந்தியா உலக அளவில் உயிரிழப்பு எண்ணிக்கையிலும் மூன்றாவது இடத்தைப் பிடித்துவிடும்.

கொரோனாவில் புதிய உச்சத்தைத் தொட்ட இந்தியா! ஒரே நாளில் 77,266 பேருக்கு பாசிடிவ்


உலக அளவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. பிரேசிலில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 37,61,391. இந்தியாவில் தற்போது 33,87,501 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் இந்தியா இரண்டாவது இடத்துக்கு வந்துவிடும் அபாயம் உள்ளது.