இன்னும் ஒரு வாரத்துக்குள் மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் வருது… அதிகரிக்கும் விமானப்படையின் பலம் ..

 

இன்னும் ஒரு வாரத்துக்குள் மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் வருது… அதிகரிக்கும் விமானப்படையின் பலம் ..

2016ம் ஆண்டில் மத்திய அரசு இந்திய விமானபடையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் மொத்தம் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் போட்டது. இதுவரை டசால்ட் நிறுவனம் இந்தியாவுக்கு 10 ரபேர் போர் விமானங்களை வழங்கியுள்ளது. இதில் 5 விமானங்கள் இந்திய விமான படை வீரர்களின் பயிற்சிக்காக பிரான்சில் உள்ளன. எஞ்சிய 5 ரபேல் போர் விமானங்கள் கடந்த ஜூலை 29ம் தேதி இந்தியா வந்து சேர்ந்தது. அவை முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டன.

இன்னும் ஒரு வாரத்துக்குள் மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் வருது… அதிகரிக்கும் விமானப்படையின் பலம் ..
ரபேல் போர் விமானம்

4.5 தலைமுறை விமானமான ரபேல் போர் விமானத்தில் ஹேமர் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த ஜூன் மாதம் முதல் சீன ராணுவம் கிழக்கு லடாக் எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் ரபேல் போர் விமானங்கள் வந்தது இந்திய விமானப்படைக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் ஒரு வாரத்துக்குள் மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் வருது… அதிகரிக்கும் விமானப்படையின் பலம் ..
ரபேல் போர் விமானம்

தற்போது மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் அடுத்த மாதம் (நவம்பர்) 5ம் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல். 2021 ஜனவரியில் மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் முறையே 3 மற்றும் 7 ரபேல் போர்விமானங்களை இந்தியாவுக்கு டசால்ட் நிறுவனம் வழங்கும் எதிர்பார்க்கப்படுகிறது.